தொடரி படம் வெளியானதை தொடர்ந்து, கொடி படத்தை தீபாவளி விருந்தாக தரவிருக்கிறார் தனுஷ்.
இதனிடையில் ராஜ்கிரண் நடிக்க, பவர் பாண்டி என்ற படத்தையும் இயக்கி தயாரித்து வருகிறார்.
விரைவில் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.
இவையில்லாமல், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதி தயாரிக்க போகிறாராம்.
“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை கூட இப்படத்திற்காக தேர்வு செய்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.
கோச்சடையானை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.